விருதுநகர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ததாக பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இன்று கைது செய்தனர்.
விருதுநகர் அருகே அரசகுடும்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்(19), புல்லட்பாண்டி(21) உள்பட மாணவர்கள் (பெயர்மாற்றம்) 9ம் வகுப்பு மாணவர் முத்து(14), 10-ம் வகுப்பு மாணவர் மகேந்திரன்(15) ஆகியோர் அழைத்துச் சென்றதாக பெற்றோருக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவர்கள் மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸார் பால்ராஜ், புல்லட்பாண்டி, மாணவர்களான முத்து, மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில், மேற்குறிப்பிட்ட நான்கு பேரும் சேர்ந்து மனநலம் பாதித்த சிறுமியை தங்களது வீடுகளுக்கும், பம்ப்செட் தோட்டத்திற்கும் ஏமாற்றி அழைத்துச் சென்று மானபங்கம் செய்துள்ளதாக மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

