ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை: தந்தை புகார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

News image
Updated On :8 அக்டோபர் 2015, 1:48 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டதாரி ஆசிரியையைக் காணவில்லை என்று அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

வத்திராயிருப்பு-கோட்டையூரைச் சேர்ந்தவர் க.பெருமாள் (48). இவரது மகள் தங்கம் (27). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஏ., பி.எட்., படிப்பு முடித்துள்ளார். கடந்த ஓராண்டாக சென்னையில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோருக்கான பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாராரம். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த தங்கம், மனநிலை பாதிக்ப்பட்டவர்போல நடந்துள்ளார். இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்கிழமை பெருமாள் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு வந்து பார்த்தபோது தங்கத்தைக் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து இன்று வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.