பள்ளிகளில் அக்.15-ம் தேதி உலக கை கழுவும் நாள் நடத்த உத்தரவு
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் முழு சுகாதார தமிழகம், தூய்மையான பாரதம்-தூய்மையான பள்ளி என்ற நோக்கத்துடன் உலக கை கழுவும் நாளை அக்டோபர் 15-ம் தேதி அனுசரிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.









