மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் சங்க கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :12 அக்டோபர் 2015, 2:00 pm

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட கிளைக் கூட்டத்திற்கு செயலாளர் என்.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட ராமசுப்பு, மாவட்ட செயலாளர் எம்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணைச்செயலாளர்கள் சுவசுப்பிரமணியன், இளையபெருமாள், பி.நடராஜன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். நிறைவாக மாவட்ட துணைச்செயலாளர் என்.சிவா நன்றி கூறினார்.
 

இக்கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தனியாக பயனித்தால் மட்டுமே ரயில் கட்டண சலுகை உண்டென்றும், குடும்பத்தினருடனோ மற்றவர்களுடனோ பயணித்தால் கட்டண சலுகை கிடையாது என்ற ரயில் துறையின் உத்தரவை கூட்டம் கண்டனம் செய்கிறது.
 

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை விரிவுப்படுத்தி அளிப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.