விகுதுநகர் அருகே நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவர் மீது கல் வீசி தாக்கியதில் காயம் அடைந்தார்.
விருதுநகர் அருகே காமராஜர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதம்(60). இவருக்கு சொந்தமாக 8 வீடுகள் உள்ளன. அதில், 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளாராம். இதிலுள்ள ஒரு வீட்டில் ஜெயராஜ் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். அதேபோல், எதிரில் குடியிருக்கும் பால்பாண்டியின் மகனான ராஜேஷிற்கும், ஜெயராஜ் மகள் குருதனலட்சுமிக்கும் தகாத உறவு இருந்ததாம். இதை ஒரு முறை பார்த்து அற்புதம் கண்டித்தாராம்.
இதையடுத்து, ஜெயராஜ் குடும்பத்தை காலி செய்யவும் வலியுறுத்தினாராம். அதைத் தொடர்ந்து அவரும் வீட்டை காலி செய்துள்ளார். இந்நிலையில் அற்புதம் திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது நள்ளிரவில் இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இது குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் அற்புதம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : கார்கே விமர்சனம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

