ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெண் காவலருக்கு தொல்லை கொடுத்த காவல் அமைச்சுப் பணியாளர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை கொடுத்த, மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :17 அக்டோபர் 2015, 8:50 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை கொடுத்த, மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முத்துமாரி (27). இவர் திருச்சி, துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வீரவேலு (32) சென்னை மாநகர காவல் ஆயுதப்படையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் உண்டு.

தேனி மாவட்டம், பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பதினெட்டான் மகன் ராஜேஸ்கண்ணா (35). இவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தபோது, காவலர் முத்துமாரிக்கு தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்கண்ணா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாறுதலாகி வந்துள்ளார்.

இந்நிலையில் முத்துமாரியும் அவரது கணவரும் மருத்துவ விடுப்பில் குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார்கள். வியாழக்கிழமை வீட்டில் குடும்பத்தார் எல்லோரும் இருந்த நேரத்தில் வீட்டிற்கு ராஜேஸ்கண்ணா வந்துள்ளார். முத்துமாரியை இரண்டாம் தராமாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு முத்துமாரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஸ்கண்ணாவைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தினர். நீதிபதி பசும்பொன் சண்முகையா, ராஜேஸ்கண்ணாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.