ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விருதுநகரில் வீடு புகுந்து 8 பவுன் செயின், மடிக்கணினி திருட்டு

விருதுநகரில் வீடு புகுந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :17 அக்டோபர் 2015, 3:57 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகரில் வீடு புகுந்து நகை, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

விருதுநகர், சத்தியசாயி நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (42). இவர் வெளியே செல்லும் போது வீட்டைப் பூட்டி சாவியை வெளியே உள்ள அம்மிக்கல்லுக்கு கீழே வழக்கமாக வைத்துச் செல்வாராம். இம் மாதம் 4-ம் தேதி இதே போல வெளியே சென்றிருந்துள்ளார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது சாவி அதே இடத்தில் இருந்துள்ளது. சாவியைத் திறந்து உள்ளே சென்று முத்துலட்சுமி பார்த்தபோது, யாரோ சாவியை எடுத்து திறந்து பீரோவில் இருந்த எட்டே கால் பவுன் தங்க நகைகள், மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது.

இது குறித்து பாண்டியன் நகர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.