இது குறித்து வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் சோலையம்மாள் புகார் செய்தார். போலீஸார் சபரிமலை மீது கடத்தல், கற்பழித்தல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சபரிமலையை சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிபதி பசும்பொன் சண்முகையை, சபரிமலையை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.