விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் இளைஞர் சடலம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :6 செப்டம்பர் 2015, 12:12 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர், மாதாநகரைச் சேர்ந்தவர் மி.ஜோசப் (51). இவரது மகன் இருதய பிரவீன் (25). திருமணம் ஆகாத இவர் அமல்ராஜ் என்பவர் வீட்டில் தங்கியிருந்து, அவரது காட்டில் கூலி வேலை செய்து வந்தார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து குடும்பத்தாரை பார்த்துச் செல்வாராம். வெள்ளிக்கிழமை இரவு அமல்ராஜூடன் வீட்டிற்கு வந்த இருதய பிரவீன் தந்தையுடன் பேசிச் சென்றுள்ளார்.

சனிக்கிழமை திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு திரையரங்கு அருகே அமல்ராஜ் நின்று கொண்டிருந்துள்ளார். அவரிடம் தனது மகனைப் பற்றி ஜோசப் கேட்டுள்ளார். அப்போது அமல்ராஜ், அவனை நேற்றிலிருந்து காணவில்லை என்று கூறியுள்ளார்.

பல இடங்களில் தேடியதில், மாதாமலையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் காட்டில் உள்ள கிணற்றில் இருதய பிரவீன் சடலம் மிதந்துள்ளது.

இது குறித்து ஜோசப், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.