ராஜபாளையம் அருகேயுள்ள கீழவரகுணராமபுரத்தைச் சேர்ந்தவர் ராமையா-பாப்பாத்தி தம்பதியினரின் மகன் சுரேஷ் (21). இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 5.6.11-ம் தேதி தனது நண்பரின் சகோதரியின் திருமணத்திற்காக இரு சக்கர வாகனத்தில் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, துரைச்சாமியாபுரம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த லோடு வேன் இரு சக்கர வாகனத்தில் மோதியதில் சுரேஷ் உயிரிழந்தார். சங்கரன்கோவில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.