விருதுநகரில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்தவர் நாகமணி(60). இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றிருந்தாராம். இந்நிலையில், நேற்று இரவு விருதுநகருக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் கதவு பூடடு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து உள்ள சென்று பார்க்கையில் பீரோவும் கம்பியால் நெம்பி உடைக்கப்பட்டு 10 சவரன் நகை, ஒரு லட்சம் மதிப்பிலான வைரத்தோடு மற்றும் வெள்ளிப் பொருள்கள் ஆகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் நாகமணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, வீட்டில் ஆள்கள் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

