விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் இயந்திரம் மூலம் நெற்பயிரிடும் பணியை மேற்கொள்வதற்கு 4900 ஹெக்டேர் வரையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.கனகராஜன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பணியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு பல்வேறு மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. அதில், நெற்பயிர் நடும் பணியின் போது ஏற்படும் ஆள்கள் பற்றாக்குறையை தவிர்க்கவும், நவீன சாகுபடி உத்திகளை பயன்படுத்தும் வகையிலும் நெற்பயிர் சாகுபடியை இயந்திரம் மூலம் மேற்கொள்ளவே விவசாயிகளுக்கு அரசு மானியம் அளிக்கிறது.
அதன் அடிப்படையில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வரையில் மானியம் அளிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 4900 ஹெக்டேருக்கு வழங்கப்பட இருக்கிறது. எனவே இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதால் நெற்பயிரிடும் சாகுபடி செலவு குறைவதுடன், நடவுப்பணியும் துரிதமாக மேற்கொள்ள முடியும்.
மேலும், 10 ஆண்டுகளுக்குள்பட்ட சான்று பெற்ற விதைகளுக்கு விநியோக மானியமாக ரூ.10ம், அதேபோல் உயர் விளைச்சல் தரும் சான்று பெற்ற நெல் விதைகளை உற்பத்தி செய்வதற்கு, உற்பத்தி மானியமாக ரூ.5ம் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளை பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

