விருதுநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமை திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு முதல்வர் சீ.மோகன்ராம் தலைமை வகித்தார். இப்பயிற்சி முகாமில் ஒருங்கிணைப்பாளர், முதுநிலை விரிவுரையாளருமான கைலாசவாணி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு, திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை, பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், நல்ல உறவுமுறைகளை உருவாக்குதல், தகவல் தொடர்பு கொள்ளும் திறன், மன அழுத்த மேலாண்மை, மாணவ மாணவிகள் குழு உருவாக்கம், பணி அர்ப்பணிப்பு ஆகிய தலைப்புகளில் விரிவுரையாளர்கள் வெங்கிடசாமி, பழ.அழகப்பன், மகாலிங்கம், வட்டார வளமைய பயிற்றுநர்கள் பெத்தனசாமி, ரஹீம் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
இம்முகாமில் நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளி்ட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தோட்டத் தொழிலாளா்களுக்கு வீடு! முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களிடம் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேட்பாளா்களின் சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நிறைவு

அரசு மதுபானக் கடைகளுக்கு ஏப்.21 முதல் 23 வரை விடுமுறை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

