லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி

விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொலம்பஸ் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

Updated On :15 செப்டம்பர் 2015, 2:04 pm

விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கொலம்பஸ் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் சார்பில் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

இக்கல்லூரி வளாகத்தில் நடந்த முாகமிற்கு செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஆனந்த் ஆச்சாரி, டீன் சாருகேசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கொலம்பஸ் அகெய்ன் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை அதிகாரி எம்.குபேரன் மென்பொருள் செயலி உருவாக்குவதற்கான தொழிற்பயிற்சியை வழங்கினார். அதைத் தொடர்ந்து தொழில் நுட்ப நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த மகாமில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான தொழிற்பயிற்சியை வழங்கியதோடு, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மென்பொருள் தயார் செய்வது தொடர்பாகவும் எடுத்துரைத்த தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் குபேரனை பாராட்டி கல்லூரி நிர்வாகத்தினர் நினைவு பரிவு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.