லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாமை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

Updated On :15 செப்டம்பர் 2015, 2:02 pm

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாமை ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார்.

விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் வே.ராஜாராமன் பேசுகையில், ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் 12 இலக்கை தனிநபர் அடையாள எண் கொண்டதாகும். இந்த அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், அதனுடன் பெயர் முகவரி உள்ளிட்ட, புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படுகிறது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், ஆதார் எண் வங்கி சேவை, செல்லிடபேசி இணைப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்களையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.  இத்தகைய தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முகாம் அமைத்து எடுக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால், மாவட்டம் முழுவதும் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு ஒரு முகாம் அமைத்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இம்முகாம் குறி்தது பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தகவல் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டை எடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.