அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியோர்கள் கூட்டமைப்பின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் தனியார் அரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். சாத்தூர் ஒன்றிய தலைவர் சி.கே.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். பின்னர் காலமான இயக்க உறுப்பினர்களுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் அறிக்கை சமர்பித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.தேவராஜ் வரவு, செலவு கணக்கு அறிக்கையை சமர்பித்தார்.
இதில், மூத்த குடிமக்கள் தனித்து பயணித்தாலே ரயில் கட்டணச் சலுகை அனுபவிக்கலாம் என்ற ரயில்வே துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளில் உள்ள தவறான விவரங்களை திருத்தம் செய்ய வேண்டும். கேரளம் போல் மாத முதல் நாளிலேயே ஓய்வூதியம் வழங்கவும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து தேர்தல் வாக்குறுதிப்படி வரையறுக்கப்பட்ட பென்சனை நீட்டிக்க செய்ய வேண்டும் என்பது போல் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

