பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி: ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரடைப்பால் மரணம்

பண்ருட்டி அருகே ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

News image
Updated On :5 டிசம்பர் 2016, 5:15 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
சென்னை அப்பல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சன்னியாசிப்பேட்டை சேர்ந்த நீலகண்டன்(40) இவர் நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 108 அவரச வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவமனைக்கு சென்று செல்லும் வழியிலேயை உயிரிழந்துள்ளார்.
உயரிழந்த நீலகண்டன் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். அவருக்கு மனைவி ஷாகிலா(38), 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.