கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த செந்தூர்பாண்டியனின் மறைவையடுத்து, அந்தத் தொகுதி ஏற்கெனவே காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு தொகுதி காலியாக இருந்தால், அந்தத் தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும், பொதுத் தேர்தலின் போது வழக்கம்போல இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.