வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லையில் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :20 ஜூலை 2016, 10:23 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.

வழக்குரைஞர்கள் தங்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே புதன்கிழமை வழக்குரைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதானச் சாலையில் சட்டக் கல்லூரி முன்பு அவர்கள் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.