வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2016, 12:02 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் ஒரே நாளில் அடவிநயினார் அணை நீர்மட்டம் 9 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும் உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-30, பாபநாசம் கீழ் அணை-11, சேர்வலாறு அணை-3, மணிமுத்தாறு அணை-6, கடனாநதி அணை-15, ராமநதி அணை-3, கருப்பாநதி அணை-4, குண்டாறு அணை-42, அடவிநயினார் அணை-20, கொடுமுடியாறு அணை-17, கன்னடியன் அணைக்கட்டு-2, தென்காசி-6, ஆய்க்குடி-6.2, ஆலங்குளம் 1.4.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் சில தினங்களாக நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் பிரதான அணைகளின் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2126.69 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 664 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 800 கனஅடி, கடனாநதி அணைக்கு 128 கனஅடி, ராமநதி அணைக்கு 25.60 கனஅடி, குண்டாறு அணைக்கு 15 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 97 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 57 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 79 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 104.49 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.95 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 37 அடியாகவும் இருந்தது.

இதேபோல், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 49 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 13 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 24 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 24.94 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.76 அடியாகவும் இருந்தது.

பாசனத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து 500 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 45 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து சாகுடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.