ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அமைச்சராக பதவியேற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சொந்த ஊரில் அமோக வரவேற்பு

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சொந்த மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சனிக்கிழமை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 மே 2016, 10:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சொந்த மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சனிக்கிழமை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டப் பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லையான ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அழகாபுரியில் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா, நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் அங்கு மாவட்ட அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அ.காமராஜ் அமைச்சரை சந்தன மாலை அணிவித்து வரவேற்றார். அங்கிருந்து வழிவிடு முருகன் கோவிலில் சென்று அமைச்சர் அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணன்கோவில், ராமாகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை புரிந்த  அமைச்சரை, கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் வரவேற்றனர். அங்கு அவருக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தனது சொந்த தொகுதியான சிவகாசிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டப் பொருளாளர் மல்லி எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கி.காளிமுத்து (ஸ்ரீவில்லிபுத்தூர்), கனகு அம்மாள் (வத்திராயிருப்பு) உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.