
சென்னை
உடலநலக் குறைவுகாரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தெடர்பாக அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளிட்டுள்ள அறிக்கை விபரம்வருமாறு:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிருமித்தொற்றுக்கு உரிய சிகிச்சையும், தேவையான மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்த சிகிச்சையை அடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. அவரது நிலையை அப்போல்லோ மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதல்வருக்கு இன்னும் சிறிது நாட்கள் ஒய்வு தேவைப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.