'மூலிகை பெட்ரோல்' பெயரில் மோசடி: ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறை!
மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.









