வடகிழக்குப் பருவமழை நீரை சேமிக்கும் வகையில் பரந்தூர் ஏரியின் மதகு, கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம்-சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ளது பரந்தூர். இந்த ஊராட்சியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி பொதுப்பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த ஏரியை நம்பி பரந்தூர், மேட்டுப் பரந்தூர், பள்ளப்பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 750 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் பரந்தூர் ஏரி, முறையான
பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. மேலும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்த நிலையிலும், மதகுகள் சேதமடைந்தும் உள்ளன. இதனால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சிலர், பம்ப் செட் மூலம் ஏரியில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, தங்களது நிலங்களுக்கு பாய்ச்சுகின்றனர். வசதியில்லாத ஏழை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் பரந்தூர் ஏரியின், மதகு, கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


