தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அமைச்சர் விஜயபாஸ்கர் சரத்குமாருக்கு வருமான வரித் துறை சம்மன்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் திங்கள்கிழமை (ஏப்.10) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க

News image
Updated On :9 ஏப்ரல் 2017, 11:15 pm

DIN

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் திங்கள்கிழமை (ஏப்.10) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்தினர். முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதி, எழும்பூர் தனியார் விடுதிகளில் சோதனை நடைபெற்றது. கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் விவரம், பணம் போன்றவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் திங்கள்கிழமை (ஏப்.10) காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுகிறார்கள். மேலும் வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்படும். தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் விஜயபாஸ்கர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்று நடிகர் சரத்குமார், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரும் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் மூவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.