ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசு பெண்கள் காப்பகத்தில் வார்டன் மீது தாக்குதல்: 5 பெண்கள் தப்பி ஓட்டம்

கோவை அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கி இருந்த 5 பெண்கள் வார்டனைத் தாக்கி விட்டு சனிக்கிழமை இரவு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்

News image
Updated On :9 ஏப்ரல் 2017, 1:01 pm

DIN

கோவை:  கோவை அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கி இருந்த 5 பெண்கள் வார்டனைத் தாக்கி விட்டு சனிக்கிழமை இரவு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
கோவை சங்கனூர் சாலை கணபதியில் அரசு பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் விபச்சார வழக்குகளில் மீட்கப்படும் பெண்கள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் வைக்க முடியாத பெண்கள் இங்கு அடைக்கப்படுவது வழக்கம். இதில் நேற்று சனிக்கிழமை 9 பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கண்காணிக்க வார்டன் மற்றும் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இந்தநிலையில், நேற்று சனிக்கிழமை இரவு அறையில் தங்கியிருந்த 5 பெண்கள் திடீரென வார்டனைத் தாக்கி விட்டு சாவியைப் பறித்துள்ளனர். பின்னர் வார்டன் அறையில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் 2 செல்லிடப்பேசியையும் திருடி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.