சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத் ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் பழனிசாமி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக தலைமையிலான அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்தார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள புகார்கள் அனைத்தும் தவறானவை. நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எந்த எம்எல்ஏக்களும் மிரட்டப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.