நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி: தீபா மீது காவல் நிலையத்தில் புகார்

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2017, 11:08 am IST

உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தீபா பேரவைச் சேர்ந்த நிர்வாகி ஜானகிராமன் என்பவர் அளித்துள்ள அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் பொருளாளராக தான் இருப்பதாகவும் அவர் அறிவித்தார். மறுநாளே, அந்த அமைப்பின் பொதுச் செயலராகவும் தான் இருப்பதாக தீபா கூறினார்.

அதேவேளையில், சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பின் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்து ரத்து செய்தார். ஆனால் அதை தீபா எங்களிடமிருந்து மறைத்துவிட்டார்.

இதற்கிடையில், உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தீபா அறிமுகப்படுத்தினார். பேரவையில் உறுப்பினராக சேருவதற்கு அந்தப் படிவத்தை ரூ.10 கொடுத்து வாங்கி நிரப்பி, நிர்வாகிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார். இவ்வாறு அவர், சுமார் 2 லட்சம் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்தார்.

எனது மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக 5 ஆயிரம் படிவங்களை ரூ.50 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். ஆனால் அதற்கான ரசீது எதுவும் வழங்கப்படவில்லை. உறுப்பினர் படிவத்தில் இருந்த முகவரியும், பேரவையின் முகவரியும் மாறுப்பட்டிருந்தது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகள் அந்த படிவத்தில் இருந்தன.

உறுப்பினர் படிவம் மூலம் ரூ.20 கோடி வரை பெற்றுக் கொண்டு, தீபா மோசடி செய்துள்ளார். எனவே தீபா மீதும், அவருடன் மோசடிக்கு துணைபோகும் ராஜா, சுகன்யா மீதும் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.