சென்னை: வெகு நாட்களுக்குப் பிறகு தென் தமிழகத்தின் சேலம், ஈரோடு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
மழை மற்றும் சென்னையின் வெப்பம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தென்தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட மக்களின் கனவு நாள் என்றே நேற்றைய தினத்தை சொல்ல வேண்டும். இவ்விரு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது என்று நேற்றைய தினம் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் சிலர், சென்னையில் மழை பெய்யுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நோ என்றும், சென்னையில் வெப்பம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று மதியம் லேசான மழை பெய்துள்ளது. நாகர்கோயிலுக்கும் மழை வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. திருத்தணியில் நேற்று மேக மூட்டம் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்பூா் அருகே தபால் வாக்கை மாற்றி பெற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


