என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிப்பு

நெய்வேலியில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிப்பு
Updated on
1 min read

பண்ருட்டி: நெய்வேலியில் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர்.

மாதத்திற்கு 26 நாட்கள் பணி வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21-வது நாளாக என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நெய்வேலி மந்தாங்குப்பத்தில் உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்.

எ.ஐ.சி.யு.டி மாவட்ட பொதுச்செயலர் எம்.சேகர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், இவர்கள் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் அல்லது தங்களிடம் இருந்த ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை மனுவினை மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) சந்திரசேகரிடம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதால் ஒப்பந்த தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com