ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சென்னையில் இன்று மதிய நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்!

சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு இன்று மதிய நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

News image

file photo

Updated On :1 ஆகஸ்ட் 2017, 7:46 am


சென்னை: சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு இன்று மதிய நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தென்மேற்குப் பருவ மழை, தமிழகத்தில் பரவலாக அவ்வப்போது பெய்து வந்தாலும், சென்னையை மட்டும் பாராமுகமாகவே வைத்துள்ளது. அவ்வப்போது வந்து தாகம் தணித்தாலும் சென்னைவாசிகளின் ஏக்கத்தைப் போக்க முடியவில்லை.

இந்த நிலையில், சென்னையில் இந்த ஆண்டில் முதல் முறையாக மதிய வேளையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, சென்னையில் பல நாட்களுக்குப் பிறகு, கடற்காற்று விரைவாகவே வீசத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னையில் பரவலாக சிறிய அளவில் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நகரத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அதுவும் ஓராண்டுக்குப் பிறகு சென்னையில் மதிய வேளையில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். இது மிக மிகச் சிறிய மழைதான் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.