இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசியல் நேர்மையைப் பற்றி பேச பாஜக தகுதியிழந்துவிட்டது: வைகோ காட்டம்

குஜராத் மாநிலங்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதன் மூலம், பாஜக அரசியல் நேர்மையைப் பற்றி பேசும் தகுதியை இழந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:37 pm

DIN


சென்னை: குஜராத் மாநிலங்களவைத் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதன் மூலம், பாஜக அரசியல் நேர்மையைப் பற்றி பேசும் தகுதியை இழந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பாஜக வேட்பாளர் ஒருவர் தோல்வியை சந்தித்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

அதோடு, காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக பாஜகவுக்கு எதிராக கடும் விமரிசனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஒரு நாள் நீதி வெல்லும் என்று சொல்வது போல், நீதி வென்றது. ஒரு கட்டத்தில் தர்மம் வெல்லும் என்று சொல்வது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அரசியல் செய்கிறது பாஜக. 

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதன் மூலம், கன்னத்தில் அறை வாங்கி இருக்கிறது பாஜக. 

காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது. இரண்டு எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததை பாஜக தலைவர்களுக்கு காட்டியதால், அவர்களது வாக்குகளை செல்லாதவையாக அறிவித்து, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜனநாயகத் திருடர்கள். அவர்களது வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி, அரசியல் நேர்மையை பற்றிப் பேச மோடிக்கு அருகதை இல்லை, அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று வைகோ கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.