“நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று”, என மக்களவைத் துணைத் தலைவர் திரு. மு.தம்பித்துரை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு நிவாரணம் கிடைக்காதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களவைத் துணைத் தலைவர் இப்படி அறிவித்திருப்பது, இதுவரை மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் “நீட் பிரச்னைக்குத் தீர்வு காணுவோம்”, என்று கூறிவந்தது வெறும் ஏமாற்று நாடகம் என்பது நிரூபணமாகி விட்டது.