
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளித்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளித்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். சிபிஎஸ்இ மாணவர்களின் சார்பில் வழக்கு தொடரப்படும். கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறது எனக் கூறுவது பொய்.
தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறப் போவதில்லை. நீட் தேர்வில் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கோரி அவசரச் சட்டம் கொண்டு வருவதும் சட்டவிரோதம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.