தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
காவிரி பிரச்னையில் துரோகம் செய்ததாகக் கூறி, அதற்காக தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, மதிமுக சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டி: மேகேத்தாட்டுவில் அணை கட்டிக்கொள்ளலாம், எங்களுக்குத் தண்ணீர் மட்டும் விட்டால் போதும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர் சேகர் நாப்தே கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா தற்போது முதல்வராக இருந்திருந்தால், அந்த வழக்குரைஞரை உடனடியாக நீக்கியிருப்பார். ஆனால், தமிழகத்தில் விவசாயத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார். காவிரிப் பிரச்னையில் துரோகம் செய்த முதல்வர் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றார் அவர்.
பின்னர், வைகோ உள்பட அந்தக் கட்சியைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


