

டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் விரைவில் இணைவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வழி நடத்துவோம். அதிமுக 2 அணிகளும் இணைந்ததுபோல் பிரிந்து சென்றவர்களும் இணைவார்கள்.
பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபடுவார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்து செல்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.