இரு அணிகள் இணைந்தாலும் சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர்: தினகரன்
இரு அணிகள் இணைந்தாலும் வி.கே. சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


சென்னை: இரு அணிகள் இணைந்தாலும் வி.கே. சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தாமாக பதவி விலக வேண்டும் என்பதற்காகவே முதல்வர் பழனிசாமிக்கு அவகாசம் கொடுத்துள்ளோம். தமிழக அரசு குறித்து 19 ஏம்எல்ஏக்களும் கொடுத்த கோரிக்கை மனு மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். எந்த அரசியல் ஆதாயத்துக்காகவும், முதல்வருக்கு எதிராக மனு கொடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் பதவி விலகினால்தான் பிரச்னை முடிவுக்கு வரும். பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அனைவரும் சொல்லும் நிலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
இரு அணிகள் இணைந்தாலும் வி.கே. சசிகலாதான் அதிமுக பொதுச் செயலர், பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலருக்கு மட்டுமே உள்ளது.
எங்களது ஆதரவு ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் அணியில் இருந்து வெளியே வருவார்கள். துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...