டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிடிவி தினகரனை வாழ்த்தி தமிழக அமைச்சர் ட்வீட்? 'திடீர்' பரபரப்பு! 

நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தி தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் வெளியாகியுள்ள ட்வீட்டானது பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:26 pm

DIN

சென்னை: நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தி தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் வெளியாகியுள்ள ட்வீட்டானது பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் நடந்து  முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் "ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார்!" என டிவிட்டரில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு ட்வீட் வெளியாகி இருந்தது.

இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்படைந்த நிலையில் தான் அவ்வாறு டிவிட்டரில் டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

டிவிட்டரில் எனது பெயரில் வெளியான பதிவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த டுவிட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தனது பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை.

இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது குறிப்பிட்ட அந்த டிவிட்டர் முகவரியானது அத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.