கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் பன்னீர்செல்வம்! 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் பன்னனீர்செல்வம் புறப்பட்டு சென்றார்.  

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:58 am

DIN

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் பன்னனீர்செல்வம் புறப்பட்டு சென்றார்.  

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடச் செய்தார் என்று நேற்று முன்தினம் இரவு  முதல்வர் பன்னனீர்செல்வம் பேட்டியளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் சூழல் பரப்பானது.

இந்நிலையில் மும்பையில் இருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 3.30 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். அவர் முதல்வர் பன்னீர்செல்வத்தை மாலை 5 மணியளவில் சந்திப்பார் என்று முதலில் தகவல் வெளியானது. 

இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடைய அடையார் கிரீன்வேஸ் சாலை இல்லத்திலிருந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்.   அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனும் உடன் சென்றார் என்று தெரிகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.