புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் கல் வீச்சு,பதற்றம்; போலீஸ் குவிப்பு!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கே போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2017, 12:25 pm

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கே போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பதவியேற்றார்

அதனைத் தொடர்ந்து க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்களுக்கும், அருகில் அமைந்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் கூடியிருந்த அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தைத் தொடர்ந்து மர்ம நபர்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் கல் வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் சிலர் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அங்கே போலீஸ் குவிக்கபட்டுள்ளது.    

தற்போது அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.