பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல: ப.சிதம்பரம் கருத்து

இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி வரி அல்ல என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:20 pm

DIN


காரைக்குடி: இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி வரி அல்ல என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், ஜிஎஸ்டி என்பது ஒரே வரி. நாடு முழுவதும் ஒரே வரி என்பதுதான் கொள்கை. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல.

ஒரே வரி இந்தியாவில் இருக்க வேண்டும். அதுதான் ஸ்டேண்டர்ட் வரி. அதனுடன் பிளஸ் ஸ்டேண்டர்ட், மைனஸ் ஸ்டேண்டர்ட் வரி இருக்க வேண்டும் என்பதே திட்டம். 

ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியால் முதல் விளைவாக பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வரி முறை சிறு குறு வியாபாரிகளைத்தான் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.