மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்; விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் பினாமி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும் என்று ஓ.பன்னீர்செல்வம்

News image
Updated On :10 ஜூலை 2017, 5:47 am

DIN

ராமநாதபுரம்: தமிழகத்தில் பினாமி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை தொண்டிவாப்பா மைதானத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக தற்போது இரு அணிகளாக பிரிந்திருப்பதன் மூலம் ஆட்சிக்கு வந்து விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைப்பது பலிக்காது. அதிமுக தொண்டர்களை குழப்ப வேண்டும் என்பதற்காகவே தினசரி பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்.
சட்டப்பேரவையில் திமுக ஒரு எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை.

திமுகவும்,எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் இணைந்து ஒரு புதுக்கூட்டணியை, புதுமைக் கூட்டணியை உருவாக்கி செயல்படுகின்றனர். அதனால் தான் சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி திருப்தியில்லாத பதில்களைக் கூறினாலும் கண்டுகொள்வதில்லை.

எம்.ஜி.ஆர்.கட்சியில் தனது அண்ணன் உட்பட குடும்ப உறுப்பினர் யாரையும் கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. அதே போல ஜெயலலிதாவும் அவரது குடும்ப உறுப்பினர் யாரையும் கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட 16 பேரும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த வந்து விட்டனர்.

கபட நாடகம் நடத்துகின்றனர் என்று தெரிந்து தான் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழுவை கலைத்தோம். இந்தநிலையில் தொண்டர்களை குழப்புவதற்காக விரைவில் இரு அணிகளும் இணையும் என்றும் தினம் தினம் புளுகுமூட்டைகளை சில அமைச்சர்கள் அவிழ்த்து விடுகின்றனர். ராவணனை அழிக்க ராமருக்கு அனுமனும், தோழர்களும் இருந்ததைப் போல தமிழக மக்களும், விசுவாசத் தொண்டர்களும் நமது அணியில் இருப்பதால் பினாமி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.