கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்

நடிகர் கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்
Published on
Updated on
1 min read

நடிகர் கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி :
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம். அவர் உறுதியாக வெற்றி பெறுவார். குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு தில்லி சென்று அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். பாஜக வேட்பாளரை ஆதரிக்க எந்த நிபந்தனையும் நாங்கள் விதிக்கவில்லை.
நீட் தேர்வு விலக்கு மசோதா உள்பட தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை அவரைச் சந்திக்கும்போது வலியுறுத்துவோம். ஜனநாயக நாட்டில் கருத்துச் சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும்.
திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் மீண்டும் கூறியிருப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
சட்டப்பேரவையில் ஆளும்கட்சி முறையாகச் செயல்படவில்லை. கச்சத்தீவு விவகாரத்தை திமுக, காங்கிரஸ் பக்கம் அரசு திசை திருப்பி விடுகிறது. கச்சத்தீவை மீட்க முக்கியமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார். இதையெல்லாம், பேரவையில் அமைச்சர்கள் எடுத்துச் சொல்லவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com