தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோலிய மண்டல பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு என்ன?: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவது தொடர்பான விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவது தொடர்பான விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், இந்தப் பிரச்னையில் திமுக தரப்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அமைதி பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது.
செங்கத்தில் மு.க.ஸ்டாலினிடம் பெட்ரோலிய மண்டலம் அமைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, சம்பந்தமே இல்லாமல் குண்டர் சட்டம் குறித்துப் பேசினாரே தவிர, இதுகுறித்து ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை. காஞ்சிபுரத்திலும் இந்தத் திட்டத்தை திமுக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா? என்பது குறித்து ஸ்டாலின் கூறவில்லை. அதைத் தொடர்ந்து அறிவாலயத்தில் பேட்டியளித்தபோது, இதனைக் கண்டித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன் என்று கூறி எந்தப் பதிலும் அளிக்க மறுத்துவிட்டார்.
உண்மையில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதைக் கண்டித்து திமுகவோ, மு.க.ஸ்டாலினோ இன்றுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கடலூர், நாகை மாட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்துக்கான இடங்கள் 2007 -08 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.
குட்கா ஊழல்: குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.