ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

நெய்வேலியில் சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநாட்கள் 19 ஆக அமைக்கப்பட்டத்தைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள்...
Updated on
1 min read

நெய்வேலியில் சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநாட்கள் 19 ஆக அமைக்கப்பட்டத்தைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஜூலை 12 முதல் வேலைநிறுத்த போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாட்கள் நிரந்தர பணி வழங்கப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வடலூர் நான்முனை சந்திப்பில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், சென்னை-கும்பகோணம், கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும்,  போலீசார் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com