சென்னை: வானம் மேக மூட்டத்துடன் இருக்கிறது, அவ்வப்போது கண்ணுக்கேத் தெரியாமல் தூறலும் போடுகிறது, இது மழையைத் தருமா என்று சென்னைவாசிகள் அவ்வப்போது வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை, கோடை வெயிலில் வெளியே சென்று திரும்புவதற்குள் பொசுங்கிப் போய்விடுவோமோ என்ற நிலை இருந்தது.
ஆனால் தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதன் எதிரொலியாக சென்னையிலும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்தது. இதனால், கோடை வெப்பத்தில் இருந்து ஓரளவுக்கு நிம்மதி கிடைத்தது.
கடந்த மூன்று நாட்களாக, சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேதான் இருக்கிறது. ஆனால் மழை பெய்தபாடில்லை.
இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
இருண்ட வானம்..மேக மூட்டத்துடன் இருக்கிறது. ஆனால் நல்ல மழைக்கு சென்னையில் வாய்ப்பு இல்லை. இந்த மாதிரி வானிலையில் நாம் தூறலை மட்டுமே எதிர் பார்க்க முடியும்.
ஊதா நிறத்தில் உள்ள மழை மேகங்களை பாருங்கள். இது தூறலை மட்டுமே கொடுக்கும். மேலும் அதிகமாக எதிர்பார்த்தோம் என்றால் கொஞ்சம் வேகமான தூறலை மட்டும் எதிர் பார்க்கலாம்.
தூறலை அனுபவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்பூா் அருகே தபால் வாக்கை மாற்றி பெற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


