திருப்பரங்குன்றம்: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மகாத்மா காந்தி இழிவுப்படுத்தும் வகையில் விமர்சனம் செய்த பாஜக தலைவர் அமித் ஷாவை தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாஜக தமிழகத்தில் அதிமுகவை 3 அணிகளாக பிரித்து வைத்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவினரின் வாக்குகளை பெறும் வரை தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழாது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனவே, மீண்டும் அதுபோல போராட்டங்கள் நடத்தி எய்மஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வலியுறுத்துவோம். உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








