பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியம்

மீன்பிடி தடைக்காலம் முடித்து மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:16 pm

DIN

நாகப்பட்டினம்: மீன்பிடி தடைக்காலம் முடித்து மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் படகில் 8 பேர் கோடியக்கரைக்கு கிழக்கே அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரையும் கைது செய்ததுடன், அவர்களது படகையும் சிறைபிடித்து யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவதால் அதிகரிப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.