ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னையில் சம்பவம்: 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியவர் கைது

தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின. சென்னையில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 மார்ச் 2017, 6:59 am

DIN


சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின. சென்னையில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுத முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வள்ளுவர் குருக்குலம் உயர்நிலைப் பள்ளியில் தேர்வெழுத கூவத்தூரைச் சேர்ந்த எம். ராஜா (24) என்பவர் தேர்வெழுத பதிவு செய்திருந்தார். ஆனால், நேற்று அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்துக்கு 19 வயது இளைஞர் சதீஷ் தேர்வெழுத வந்திருந்தார்.

தேர்வு தொடங்கிய 5 நிமிடத்தில் தேர்வு கண்காணிப்பாளருக்கு சதீஷ் மீது சந்தேகம் ஏற்பட்டு, உடனடியாக ஹால் டிக்கெட் சோதனை செய்யப்பட்ட போது ஆள்மாறாட்டம் நடந்திருப்பது தெரிய வந்தது.

ஹால்டிக்கெட்டில் புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதால், ஆள்மாறாட்டம் செய்வது பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில், ராஜாவின் முகச் சாயலிலேயே சதீஷ் இருப்பது தேர்வு அறை கண்காணிப்பாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியதாக மாவட்ட கல்வித் துறை அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.