சென்னை: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.
சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸ்லைட்டுகள் நேற்று கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 12 வீரர்கள் மரணமடைந்தனர். இவர்களில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரும் (36) ஒருவராவார். இவர் ஹவில்தாரராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பலியான சங்கரின் குடும்பதிற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சட்டீஸ்கரில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த தொகையை விரைவில் அவரது குடும்பத்திடம் சேர்க்குமாறும் உத்தரவிடப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


